Author: சஞ்சயன்
•8:13 PM
வெப்பிசாரம்: ஒரு விதமான கோபம். அவன் வராததது எனக்கு வெப்பிசாரமாய் இருக்கிறது.

எம்பிட்டுதல்: அகப்படுதல். அவன் எம்பிட்டுட்டான்.

ஒசில்: இச் சொல் சந்தர்ப்பத்தைப் பொறுத்து அழகு அழகற்றது என்று பொருள்படும். இது ”ஒயில்” என்பதன் திரிபு ஆகும்.

கெளித்தல்: சரித்து ஊற்றுதல்

குமுதம் . குமதம் குத்தல் பேரொளி

சவுத்துப்போதல்: களைத்துப்போதல்

சள்ளு: தொந்தரவு

துமித்தல்: தூறுதல்

தொப்பட்டம்: மழையில் தொப்பட்டமாய் நனைதல். முழுதாய் நனைதல்

வெட்டை: வெளி . வெட்டையால போ- வெளியே போ

சூம்புதல்: மெலிதல். என்னடா சும்பிப் பெயித்தாய் - என்னடா மெலிந்துவிட்டாய்.


சள்ளு : தொந்தரவு

வெள்ளாப்பு: அதிகாலை

படுவான்: மேற்கு.  மட்டக்களப்பின் மேற்குப்பகுதியை படுவான்கரை என்றும் அழைப்பர்.

பறவாதி: அவா கொண்டவன்


கிழக்கிலங்கையில் உள்ள பல இடங்களில் இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். இவர்களினூடாக சில அரபுமொழிச் சொற்களும் தமிழிடைக் கலந்துள்ளது.

ஆலிம்: மார்க்க அறிஞர்
கந்தூரி: அன்னதானம்
கபீர்: பெரியவர்
சாஹிப்: தோழன்
சுன்னத்து: சம்பிரதாய சடங்கு
நஜிஸ்: அசுத்தம்
ஈமான்:; நம்பிக்கை
செய்த்தான்: பிசாசு
நிக்காஹ்: திருமணம்
மத்ர்ரசா: மதபாடசாலை
மௌலவி: மார்க்கப்பண்டிதர்
(b)பலாய்: அநியாயம், கெட்டது
This entry was posted on 8:13 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On March 7, 2011 at 10:38 PM , மு. மயூரன் said...

அது எம்பிடுதல் அல்ல "அம்பிடுதல்" என்றே நினைக்கிறேன். திருகோணமலையிலும் இந்தச்சொல் பயன்பாட்டிலுண்டு.

கிறுகுதல் - திரும்புதல் (ஓடிப்போய் இடப்பக்கமா கிறுகிற்று வா)

வந்தாவு போனாவு என்று "வு" இல் முடிதல் சில இடங்களில் உண்டு.

கீர்த்தனாவின் இந்தப்பதிவு அழகான மட்டக்களப்புத்தமிழில் எழுதப்பட்டுள்ளது


http://keerthanakk.blogspot.com/2007/05/blog-post_25.html

 
On March 8, 2011 at 2:15 AM , கானா பிரபா said...

மயூரன்

எம்புடுதல் என்பதை நம்மூரிலும் பேச்சு வழக்கில் வைத்திருக்கின்றோம். அனேகமாக இது மருவியிருக்கலாம்.

புதிய பல சொற்களை நானும் அறியக் கூடியதாக இருந்தது நன்றி.

 
On March 8, 2011 at 6:44 AM , வசந்தா நடேசன் said...

‘சள்ளு குத்துதல்‘ தமிழ்நாட்டிலும் இருக்கிறது.. என் மகள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை.. நல்ல பகிர்வு, நன்றி.

 
On March 8, 2011 at 6:54 AM , Tharsan said...

பல சொற்களை அறிமுகப்படுத்திய்மைக்கு நன்றி. சள்ளடித்தல் என்ற ஒரு சொல் எங்களிடம் பாவனையில் உண்டு.அது கடலை போடுதல் என்று வேணுமென்றால் சொல்லிகொள்ளக்கூடிய அர்த்தமுடையது.

 
On March 9, 2011 at 6:43 AM , கலை said...

மட்டக்களப்பில் வாழ்ந்திருந்தாலும், பல சொற்கள் அறியாதவையாக இருக்கின்றனவே.

 
On March 10, 2011 at 1:35 PM , வந்தியத்தேவன் said...

சில சொற்கள் மட்டக்கிளப்பு நண்பர்கள் கதைக்கும் போது அவதானித்தவை. அண்ணே உந்தபாயோடை சுத்துவது என்பது உண்மையா? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கோவன்.