Author: சின்னக்குட்டி
•3:28 AM
இந்த பதிவும் எனது பழைய பதிவு தான் ...எனக்கு பிடித்த இந்த பதிவும் ஈழத்து முற்றத்துக்கு ம் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு பிரசுரிக்கிறேன்


வால்ராஜா முனையிலிருந்து ஹரியானா மாநிலம் பெற்றெடுத்த சிங்கம் கபில்தேவ் பந்து வீசி கொண்டிருக்கிறார் அழகிய தமிழில் சென்னை வானொலியில் வர்ணணையாளர் மணியின் குரல் அழகிய தமிழில் கூவி கொண்டிருக்கார்...

உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது... அப்படி ஒரு கிறேசி, வெறி.. அப்படி ஒரு. உந்த கிரிக்கட் விளையாட்டிலை அந்தக்காலம் எங்கள் தரவளி களுக்கு..



. உந்த சோம்பேறி கனவான் விளையாட்டை இந்திய உபகண்டத்துக்கு சொத்தாய் கொடுத்திட்டு போயிருக்கிறான் வெள்ளைகாரன். அவனே இப்ப உந்த கனவான் விளையாட்டிலை இன்ரறைஸை காணலை.


டிரான்சிஸ்டர் வந்த படியால் படுத்து கொண்டு காதோடை கேட்க கூடியதாயிருக்கு....... அந்த காலத்து றேடியோ ஒன்று இப்ப வீட்டு மூலையிலை கவனபாரற்று கிடக்கு அப்ப உதுக்கு இருந்த மவுசு.காலம் காலமே பரம்பரை சொத்து போல பாவிப்பினம்... அந்த பழம் றேடியாவின்ரை பற்றியை பார்த்தாலை இப்ப இருக்கிற டிராஸ்டிட்டாரிலும் பார்க்க அந்தா பெரிசு வீட்டுக்கு வெளியிலை வயர் இழுத்து அதுக்கு வேற அரைப்பனை உயரத்திலை கேடர் கம்பு தாட்டு உச்சத்திலை ஏரியல் பூட்டினால் தான் கேட்குமாம்.

ஊரெல்லாம் அமெரிக்கன் பாசனிலை வீடுகள் எழும்பியிருக்கிற நேரத்திலை சங்கிலியன் தோப்பு மாதிரி முன் தோற்றமுள்ள போர்ட்டிக்கோ சுண்ணாம்பு வீட்டுடோய் இருந்தாலும் எல்லாருக்கும் தெரியிற இந்த ஏரியல் இவை உண்மையாய் இவை வாழ்ந்து கெட்ட குடும்பம் தான் என்று பறை சாற்றி கொண்டிருக்கிறது. அந்த காலம் றேடியாக்கள் இருக்கிறாக்கள் இவை இவை தானென்று உந்த ஏரியலை வைச்சு சொல்லலாம். அந்த ரேடியாவிலை மீற்றர் பிடிக்கிற பாடென்ற அந்தா பாடு படுவினம்..

அப்பிடி மீற்றர் பிடிபட்டாலும் ஆக்கள் கிணற்றுக்குளை யிருந்து கதைக்கிற மாதிரி தான் கேட்கும்...திருச்சி, சென்னை வானொலி ஈசியாய் பிடிபட்டாலும் இந்த கொழும்பு றேடியோ ஸ்டேசன் பிடிக்கோணும் என்றால் படாதபாடு படணும். வானிலை சரியில்லாமால் பிடிபடாமால் இருந்து திருச்சி சென்னை பக்கம் திருப்பினால் வயலும் வாழ்வும், வயலின் இசையும் தனக்கு புரியாத சங்கீதத்தையும் போடுவினம் ஆர் கேட்கிறது.


பிரசித்தி பெற்ற கோயில் தேர் தீர்த்தத்துக்கெல்லாம் நேர் முக வர்ணனை செய்யிறவை தான் எங்கட தாத்ஸ் ஒன்று நேரிலை நடக்கிற மாதிரி ரசிச்சு கேட்கும். உப்பிடித்தான் அப்போலா11 விண்வெளிக்கலம் சந்திரனிலை இறங்கி ஆம்ஸ்ரோங் என்றவன் காலடி வைத்ததை வரிக்குவரி உந்த நேர் முகவர்ணனையிலை கேட்டதை ஏதோ குவாலிபிகேசன் மாதிரி புழுகும் உந்த தாத்ஸ்...


ஆயிரம் அறிவிப்பாளர் இருக்கட்டுமன்.வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகருகில் ஆவலுடன் காத்திருக்கும் என்று விடிய வலம் வரும் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சிக்கு வரும் மதுர குரலோன் கேஎஸ் ராஜாவை எல்லோருக்கும் பிடித்த மாதிரி எனக்கும் பிடிக்கும். அந்த காலத்தில் 83 கலவரத்தின் பின்னர் இங்கு நடந்த கொடுமைகளெல்லாம் சொல்ல போகிறோன் என்ற வரிகளடங்கிய நாகூர் ஹனீபாவின் பாடலை வானொலியிலை அடிக்கடி போட்டு தார்மீக கோபத்தை வெளிபடுத்தியவர்.

இதோ எனது டிரான்சிஸ்ரரில் ஓரே சன வெள்ளத்தின் கோரஸ் சத்தம் அதையும் மீறி அறிவிப்பாளர் மணி அற்புதம் அற்புதம் உயரமாக எல்லைகோட்டை தாண்டி சென்று கொண்டிருக்க்கிறது நிச்சயமாக ஆறே தான்..... கபில்தேவ் விளாசிக்கொண்டிருக்கிறராம்.... இப்ப இண்டியன் ரீம் பட் பண்ணுது போலை... எனக்கும் அந்த மாதிரி சந்தோசம் தான்.... அந்த காலத்திலை நாங்கள் இலங்கை ரீமுக்கு சப்போட் பண்றலே இந்தியன் ரீமுக்கு தானே சப்போட் பண்றது....
|
This entry was posted on 3:28 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On October 30, 2009 at 7:43 PM , thiyaa said...

நல்ல நடையில் சூப்பராய் எழுதியுள்ளீர்கள்

 
On October 31, 2009 at 11:13 AM , சின்னக்குட்டி said...

வணக்கம் தியாவின் பேனா..உங்கள் கருத்துக்கும் உங்கள் உற்சாகமூட்டலுக்கும் மிக்க நன்றிகள்