Author: கானா பிரபா
•1:42 AM

சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகபாகு முதன் முதலில் அமைத்த கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் மீளவும் ஆலயம் அமைக்க கிருஷ்ண சுப்பையர் விண்ணப்பித்தார். அதற்கு ஒல்லாந்தர் ஆட்சிககாலத்தில் சிறாப்பராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமான செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார் என்று குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த ஆட்சியாளர்களை இதனை அனுமதிக்க இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று,
கிறீஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்
இரண்டு,
தமது வர்த்தகப் போட்டியாளராகவிருந்த முஸ்லீம்களைக் குருக்கள் வளவிலிருந்தும் அகற்றும் நோக்கம்.


நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீள நிறுவுவதில் கிருஷ்ண சுப்பையரும் இரகுநாத மாப்பாண முதலியாரும் முனைப்பாகவிருந்து ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினர். கோயிலை மீள அமைப்பதற்குரிய குருக்கள் வளவில் முஸ்லீம்கள் அப்போது குடியிருந்தார்கள்.

அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.


Origin/Meaning:
The arms show the very typical Palmyra palm, an important tree for the local economy at the time. A Tamil poem describes the 801 uses of the tree... The helmet was also used by the city of Jaffna and indicates that these cities were of high importance to the colony (after Colombo).
When the above arms were adopted is not known. The above image dates from a manuscript dating from 1717/1720.

இந்த டச்சுக்காலத்து (ஒல்லாந்து) இலட்சணையின் தமிழ் விளக்கம் யாதெனில்
இது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முக்கிய உள்நாட்டு வருவாயைத் தரக்கூடிய பனைமரம் தாங்கியது. ஒரு தமிழ்ப்பாடலின் படி இந்த மரத்தின் மூலம் 801 வகையான பயன்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விலட்சணையில் பொருந்தியிருக்கும் தலைப்பாகை, கொழும்புப் பிரதேசத்துக்கு ( கோட்டை இராச்சியம்) அடுத்து யாழ்ப்ப்பாணப் பிரதேசம் காலணித்துவ ஆட்சியில் முக்கியமானதொரு இடத்தை வகித்திருப்பதைக் குறிக்கின்றது. இவ்விலட்சணையின் பகுதிகள் எப்போது அறிமுகப்படுப்படுத்தப்பட்டது என்ற விளக்கம் அறியப்படவில்லை. இவ்விலட்சணை 1717/1720 காலப்பகுதியில் பதியப்பட்ட எழுத்துப் பிரதியில் எடுக்கப்பட்டது.

நான்காவது தடவையாக அமைக்கப்பட்ட ஆலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது. யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப்படை வீரர்களுக்கும் குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் இவர் இறக்க நேர்ந்தது. குருக்கள் வளவுச் சுற்றாடலில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அந்த யோகியாருக்கு ஒரு சமாதி கட்டி வழிபட்டனர். மீள அமைக்கப்பட்ட கோயிலின் உள்வீதியில் இச்சமாதி அகப்பட்டபடியால் சமாதியை வழிபட முஸ்லீம்கள் அனுமதி கேட்டார்கள். அவர்கள் கலகம் செய்யாதிருக்கக் கோயிலின் மேற்கு வீதியில் வாயில் வைத்து அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தனர்.இதற்குச் சாட்சியாக இவ்வாயிற் கதவு இன்றுமுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியாரைப் பின்னும் கட்டியத்தில் கூறிவருகின்றார்கள்.

"சிறீமான் மகாராஜாதிராஜ
அகண்ட பூமண்டல
ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகா வல்லி
ஸமேத சிறீ சுப்ரிமண்ய
பாதாரவிந்த ஜாந்திருட
சிவகோத்திரேற்பவஹா
இரகுநாத மாப்பாண
முதலியார் சமூகா"

உசாவியது: "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம்


நல்லைக் கந்தன் ஆலயத்தில் இவ்வாண்டு நடந்த திருமஞ்சத் திருவிழாப்படங்களை அனுப்பிய கிழவிதோட்டம் செந்தூரனுக்கு நன்றிகள்









This entry was posted on 1:42 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 6, 2009 at 9:41 PM , Anonymous said...

paaarampariyamaana muslim nilathil hindu kovil. kattayam avvidathil muslim mosque katta vendum

 
On August 7, 2009 at 6:23 PM , யசோதா.பத்மநாதன் said...

நேர்மையான,பக்க சார்பற்ற கருத்துக்கள்.வாழ்த்துக்கள்.

கூடவே அழகான மஞ்சமும்.