Author: soorya
•4:16 PM
கடல். அங்கம் 1. தொடர் 2
அவருக்குச் சைக்கிள் ஓடத் தெரியாது.
...................................................................................
(தொடர்கிறது)
ஆச்சி திட்டத் தொடங்கினா விடமாட்டா. ஆச்சிமார் திட்டேக்கை ஒரு விசுவல் இமேஜ் இருக்கும். அதுக்காகவே ஆச்சிமாரைச் சீண்டலாம்....கதையுக்கை கதையா..இதையும் சொல்லத்தான் வேணும். ஒருநாள் ஆச்சி பாக்கிடிச்சுக் கொண்டிருந்தா. நான் நைஸா பக்கத்தில போய் இருந்தன்.
என்ரை பேரன் எனக்குப் பக்கத்திலை இருக்குதெடி, பாரன் பாசத்தை...! எண்டு ஆச்சி வலு சந்தோசமாய் இருந்தா.
நான், கையிற் கொண்டு போன.. ,ஒரு பிடி மண்ணை, பாக்குரலுக்குள் போட்டன்.(நான் எவ்வளவு குரூரப் புத்தியுடையவனாய் இருந்திருக்கிறேன். உண்மையில் அவாவின் திட்டுக் கேட்க எனக்குப் பிடிக்கும்.)
தொடங்கிச்சிதே மனிசி......!!!
திட்டு என்றால் அதுதான் திட்டு.
தமிழ் வசைச் சொற்களை அன்றுதான் என் செவியாரக் கேட்டேன்.
சில திட்டுகளின் முடிவில் செந்தமிழும் கலந்து கொண்டது.(யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், செந்தமிழால் திட்டுதல் என்பது தூசணத்தில் ஏசுதல் எனப் பொருள்படும். மலையகத்தில் தூசணம் என்பதற்கு, ஊத்தைப் பேச்சு என்று பொருள்)
.....
நான் உண்மையாப் பயந்து போனன்.
ஒரு ஓசை நயத்துடன்..பாடல் போல அந்தத் திட்டு அமைந்திருந்தது.
எனக்குச் சரியா நினைவில்லை.
அப்பப்ப நினைவுவரேக்கை இணைப்பதற்கு மறக்கமாட்டேன்.
.....
''என்ன ஐசே றாக்கன் வாறீரா? ஊரைச் சுத்திப் பாப்பம்?'' எண்டு கேட்டன்.
'' ம் '' என்று சொன்னார்.
எனக்குச் சிரிப்படக்க முடியேல்லை. ஏன் சொல்லுங்கோ பாப்பம்?
நான், ஒரு களிசானும் சும்மா ஒரு பெனியனும் வெறுங்காலோடையும் நிக்கிறன்.
அவரோ...,சுவற்றரும்.. பொலிஸ் பண்ணின சப்பாத்தும் நீள சொக்சுமா நிக்கிறார்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு றோட்டுக்கு வந்தன்.
''நீர் ஓடப் போறீரா? அல்லது நான் ஓடட்டா?'' என்று கேட்டேன்.
அவர், சைக்கிளை மேலும் கீழும் பார்த்தார்.
''ரொம்ப வேகமா ஓடுமா இது?'' என்று கேட்டார்.
(தொடரும்)
|
This entry was posted on 4:16 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On July 10, 2009 at 6:36 PM , யசோதா.பத்மநாதன் said...

மலையகப் பிள்ளைகள் எவ்வளவு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள்!

என்ன இருந்தாலும் நீங்கள் அந்தப் பையனைப் பார்த்துச் சிரித்திருக்கக் கூடாது:(

பாவம்.